Thursday, November 20, 2008

சமீபத்தில் நான் படித்து ரசித்த கவிதைகள்

தன் பசியை தன் தாய்க்கு உணர்த்த

அழுதிடும் குழந்தையை போலத்தான்

என் காதலும் அழுகிறது ....


எட்டிபோடும் ஒவ்வொரு அடியும்
உன்னை நோக்கியே வருகின்றேன்
பின்னே நோக்கியே நீ நடந்தால்
எப்படி தீரும் ......இந்த தூரம் ...

சிறிதாய் எல்லை மீறலாமா
என்று ஏங்கியது என் கண்கள்
நமக்குள் ஏது எல்லை
என்றது உன்கண்கள்

என் உயிரோடு உன்னை இணைக்க
உன் அனுமதி இன்றி எழுத்துக்களால்
உன் உறவை எடுத்துகொண்டேன்
இதற்க்கு விடை????
நட்பிற்குள் ஒளிந்திருக்கும் மூன்றெழுத்தா ?
நம்மை ஒன்றாய் இணைக்கும் மூன்றெழுத்தா ?
முடிவு உன் மார்புக்குள் மறைந்து இருக்கும்
மனதிடம் கேட்டு சொல் .

காதலித்து பாருங்கள்

உங்களுக்காக மட்டுமே

உலகம் சுழன்று கொண்டு இருக்கும்

அந்த உலகத்தில்

ஒரே ஒரு உயிர் உழன்று கொண்டு இருக்கும்

அந்த ஒரு உயிருக்காக மட்டுமே

உங்கள் ஆயுள் முயன்று கொண்டு இருக்கும்

No comments: